உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

இங்கிரிய பகுதியில் உள்ள பிரதான தூரிகை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்தொன்று இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரண, பானந்துறை மற்றும் களுத்துறை பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றதாக காவல்துறை தெரிவிக்கின்றது.

தீ விபத்தினால் தொழிற்சாலையின் இயந்திரங்கள் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவில்லை என காவல்துறை தெரிவிக்கின்றது.

கருத்து தெரிவிக்க