உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டபேரணி  இன்று முன்னெடுக்கபட்டிருந்தது.

மதியம் 12 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேடவழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் கந்தசாமி கோவில்வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக தொடர்போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ்கூட்டமைப்பின் சாணக்கியம்,நல்லிணக்கம், ராஜதந்திரம், யாவும் இனப்படுகொலையே என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இவர்களது போராட்டம் இன்றுடன் 888 வது நாளை எட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க