உள்நாட்டு செய்திகள்புதியவை

‘சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு பேணியவர் கைது ‘

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த ஒருவர் நேற்று (ஜூலை 25) நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது

22 வயதான குறித்த சந்தேகநபரை கொழும்பு குற்றப்பிரிவுடன் தொடர்புடைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் சஹ்ரானின் பிரசங்கங்களில் கலந்து கொண்டிருக்கலாம் எனவும் அவருடன் ஹம்பாந்தோட்டயில் ஆயுதப் பயிற்சி பெற்றிருக்க கூடும் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க