வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்க, இயக்குனர் பிரதீப்பின் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் ஜெயம் ரவி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடித்து சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 15ம் திகதி வெளியாகவிருக்கிற படம் ‘கோமாளி’.
இந்த படத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவான சென்னை வெள்ளம் தொடர்பான காட்சிகளை மீள் உருவாக்கம் செய்துள்ளனராம்.
இதுபற்றி இயக்குனர் கருத்து தெரிவிக்கையில், லைட்டிங் மாறிக்கொண்டிருக்கும் இருக்கும் என்பதால் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் ஸ்டுடியோவில் செட் போட்டதாகவும் அதுக்காக 20 நாட்களுக்கு முன்பே தொட்டி கட்டியதாகவும், மடிப்பாக்கம் ஏரியாவை தான் மீள் உருவாக்கம் செய்தாகவும், அப்போது மே மாதம் என்பதால் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், அதனால் கடல் நீரை பயன்படுத்தினதாகவும் அதில் தொடர்ந்து நான்கு நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்புக்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க