ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ களமிறக்கப்படவேண்டும் என்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பு எதனையும் வெளியிடவில்லை.
மாறாக இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பில் பேசலாம் என்று பதிலளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதன்போது ஹரின் பெர்ணான்டோ, தலதா அத்துகோரளை, ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ன, ரஞ்சித் மத்துமபண்டார உட்பட்ட பலர் சஜித் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவேண்டும் என்று கோரினார்கள்.
வெற்றிப்பெறக்கூடிய ஒருவர் வேட்பாளராக வரவேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
எனினும் அமைச்சர் ரவி கருணாநாயக்க இதற்கு உடன்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க