உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

குருநாகல் நீதவான் மீது குற்றப் புலனாய்வு பிரிவு முறைப்பாடு

முறையற்ற சொத்து குவிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில் குருநாகல் நீதிவானிடம் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு, சுயாதீன நீதிச் சேவை ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

வைத்தியர் ஷாபியின் வழக்குடன் சம்மந்தப்படாத குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சரத் வீர பண்டாரவுக்கு நீதிமன்றில் கருத்துக்கூற இடமளித்ததோடு அவரின் கருத்துக்களை வழக்குப் பதிவுகளில் இருந்து நீக்க உத்தரவிட்டமை என்பவற்றின் அடிப்படையில் குற்ற புலனாய்வு பிரிவு மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

மேலும் நீதிவான் பக்கச் சார்பாக நடந்துகொள்வதாக சந்தேகம் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை புலனாய்வு பிரிவு தொடர்பாக நீதவான் பேஸ்புக்கில் பதிவொன்று இட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க