உள்நாட்டு செய்திகள்புதியவை

4000 இற்கும் மேற்பட்ட சாரதிகள் கைது

நாடளாவிய ரீதியில் காவல்துறையினரால் செயற்படுத்தப்பட்டு வரும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கமைய இன்றுவரை 4 ஆயிரத்து 387 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவரும் போதையில் வாகனம் செலுத்துவோரை கட்டுப்படுத்தும் விசேட திட்டத்திற்கமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த சாரதிகள் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களது சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த காலம் வரையில் தடைச் செய்யப்பட உள்ளதோடு 25 ஆயிரம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதவேளை குறித்த சாரதிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகளுக்கும் வெகுமதிகள் வழங்கப்படவுள்ளன.

கருத்து தெரிவிக்க