உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தொடரூந்து கடவை அமைக்க கோரி திருமுறி கண்டியில் போராட்டம்

  1. முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் தொடரூந்து கடவையை அமைக்க கோரி இன்று காலை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருமுறிகண்டி அக்கராயன் பிரதான வீதியில் பாதுகாப்பற்ற தொடரூந்து கடவை காணப்படுவதாகவும் குறித்த கடவையில் மின்னொளி சமிக்கைகள் இடப்பட்டு இருக்கின்ற போதும் அது இயங்கவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் சிறிய பாடசாலை இருக்கின்ற காரணப்படுவதோடு அதிகளவான மக்கள் பயன்படுத்துகின்ற வீதியாக காணப்படுகிறது.

எனவே தொடரூந்து கடவை அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த இடத்தில் ஒன்று கூடிய குறித்த பகுதி மக்கள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் காவல்துறை ஆகியோரை சம்பவ இடத்திற்கு அழைத்தனர்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்களுக்கான மகஜர்களை கிராம அலுவலர்களிடம் கையளித்து இருந்தனர்.

கருத்து தெரிவிக்க