உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

காயமடைந்தவர் உயிரிழப்பு: சடலம் வைத்தியசாலையில்

வவுனியா வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வவுனியா ஈரப்பெரியகுளம் புகையிரதக்கடவையில் கடந்த 17ஆம் திகதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 தொடக்கம் 65வயது மதிக்கத்தக்க வயோதிபரை இனங்காணுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் நேற்று முன் தினம் அறிவித்துள்ளனர்.

எனினும் இன்றுவரையில் குறித்த வயோதிபரின் விபரங்கள் எவையும் கிடைக்கவில்லை எனவும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வயோதிபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் வந்து பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க