உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலிய குயின்ஸ்லேன்ட் பகுதியில் மின்சார தடை: மக்கள் விசனம்

மஸ்கெலிய குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் தொலைதொடர்பு கம்பம் மின் இணைப்பில் விழுந்ததில் இப்பகுதியில் நேற்று மாலை முதல் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதில் இருந்த மரம் தொலைதொடர்பு கம்பம் மீது விழுந்த நிலையில் அந்த கம்பம் மின் இணைப்பில் விழுந்து சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த முறிந்த மரம் இது வரைக்கும் அப்புறப்படுத்தபடவில்லை எனவும் மின்சாரம் இல்லாததால் தாம் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் சாமிமலை பகுதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் அப்பகுதியில் உள்ள சில விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க