பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நாளை மறுதினம் 22 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கபூருக்கு சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ச, சத்திர சிகிச்சையின் பின்னர் 10 நாட்களுக்கும் மேலாக வைத்தியர்களின் கண்காணிப்பில் இருந்தார்.
கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சிங்கபூருக்கேசென்று அவரை பார்வையிட்டு சுகநலம் விசாரித்தனர்.
மருத்துவ சிகிச்சைகள் நிறைவடைந்துள்ளன. நாடு திரும்பலாம் என ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நாளை மறுதினம் கோட்டா இலங்கை வரவுள்ளார் என்றும், ஆகஸ்ட் 11 ஆம் திகதி முதல் செயற்பாட்டு அரசியலில் குதிக்க வேண்டி இருப்பதால் நாடு திரும்பிய கையோடு முக்கிய சந்திப்புகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் புதிய கூட்டணி எதிர்வரும் 26 ஆம் திகதி மலரவுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கைச்சாத்திடப்படவுள்ளது.
கருத்து தெரிவிக்க