உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டிடத்தை இடைநிறுத்திய இணைத்தலைவர்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் 4.15 வரை அந்த குறித்த கூட்டமானது ஆரம்பிக்கப்படவில்லை இந்நிலையில் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது

இன்றைய தினம் புதுகுடியிருப்பு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நிறைவு செய்து ஒட்டுசுட்டான் அபிவிருத்தி குழுக் கூட்டம் ஆரம்பமாக தாமதமானதால் மக்கள் மத்தியில் குழப்ப நிலைமை ஏற்பட்டது

அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக வாயிலில் ஒன்றுகூடி இணைத்தலைவர்களை பிரதேச செயலக வளாகத்துக்குள் நுழைய விடுவதில்லை என பிரதேச செயலக வாசலில் காத்திருந்தனர்

இந்த தகவலை அறிந்த இணைத்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இன்று கூட்டம் நடைபெறாது என பிரதேச செயலாளருக்கு தெரிவித்துவிட்டு குறித்த இடத்திற்கு வருகை தரவில்லை

அத்தோடு ஏனைய இணைத்தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அரசியல்வாதிகள் பொதுமக்கள் யாருக்கும் இந்த விஷயம் தெரியவில்லை

எனவே நிலையில் ஏனைய அரசியல் தலைவர்கள் அரச அதிகாரிகள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரும் குறித்த பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து கூட்டம் இடம்பெறாததால் திரும்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர்

இந்நிலையில் கூட்டத்திற்கு வருகை தந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் குறித்த இடத்தில் தங்களை வரவழைத்து கூடடம் நடத்தப்படாமை தொடர்பாக பல்வேறு ஆதங்கங்களை வெளிப்படுத்தி அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்

கருத்து தெரிவிக்க