வெளிநாட்டு செய்திகள்

குல்பூஷன் யாதவ் விடயத்தில் பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கையைத் தொடரும் : இம்ரான் கான்

குல்பூசன் யாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரணதண்டனையை நிறுத்தி வைத்த சர்வதேச நீதிமன்றம்,  நேற்று  தீர்ப்பளித்தது.

இந்நிலையில் யாதவை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.

இதற்கிடையில், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சர்வதேச நீதிமன்றம் குல்பூசன்  யாதவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாமல்  குற்றத்தில் இருந்து விடுவிக்காததை தான் பாராட்டுவதாகவும், பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக அவர் குற்றங்களை செய்துள்ளதால் அரசாங்கம்  சட்டப்படி செய்ய வேண்டியதை செய்யும். எனவும் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க