பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், மும்பையில் கடந்த 26.11.2008 தொடக்கம் 29.11.2008 வரை 12 இடங்களில் தொடர் குண்டு தாக்குதல் நடத்தியதில் 166 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தவிர இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயித் அமெரிக்க அரசினால் கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாகவும், அவனுடைய தலைக்கு ஒரு கோடி டொலர் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஹபீஸ் சயித்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இந்நிலையில் லாகூரில் ஹபீஸ் சயித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க