உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

77 அரச உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு

வட மாகாண ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 77 அரச உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று புதன் கிழமை (17) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட 77 அரச உத்தியோகத்தர்களுக்குமான நிரந்தர நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் மற்றும் வடமாகாண சபைக்குற்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஆகியோர் வைபவ ரீதியாக வழங்கி வைத்தனர்.
இதன் போது தகவல் தொழில் நுற்ப உத்தியோகத்தர்கள் 9 பேரூக்கும்,கலாச்சார உத்தியோகத்தர்கள் 3 பேரூக்கும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 65 பேர் உள்ளடங்களாக 77 அரச உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதேசச் செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க