உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?செப்டம்பரிலேயே அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வெளியிடுவார் என கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.

எனவே, ஐ.தே.கவின் வேட்பாளர் எப்போது பெயரிடப்படுவார் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சரத்பொன்சேக்கா மேற்கண்டவாறு கூறினார்.

” எனக்கும் பிரதமருக்குமிடையில் அண்மையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என என்னிடம் அவர் கூறினார்.” என்றும் பொன்சேக்கா குறிப்பிட்டார்.

 

கருத்து தெரிவிக்க