களுத்துறையில் சூதாட்டம் இடம்பெற்ற இடத்தில் சோதனை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூன்று காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த சூதாட்டக்காரர்களைக் கைது செய்ய முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சோதனையின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார், இன்னுமொருவர் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட ஒரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க