உள்நாட்டு செய்திகள்புதியவை

செல்பி எடுக்க முயன்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்

இன்று (ஜூலை 16) உனவட்டுன ரும்மாசலா பகுதியில் செல்பி எடுக்க முயன்றபோது இரண்டு இளைஞர்கள் பாறையில் இருந்து விழுந்து காணாமல் போயுள்ளனர்.

மாலை 5 மணியளவில் நான்கு இளைஞர்கள் பாறையில் இருந்து கடலில் விழுந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்களில் இருந்து இரண்டு இளைஞர்கள் தங்களை காப்பாற்பற்றி கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்கள் 20 மற்றும் 21 வயதுடைய தெலிகடயில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

காணாமல் போன நபர்களைக் தேடும் பணி கடற்படை மற்றும் காவல்துறையினரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருத்து தெரிவிக்க