உள்நாட்டு செய்திகள்

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இயற்கை சக்தியால் சுயமாக இயங்கும் வீட்டு மாதிரியை அறிமுகப்படுத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகத்துக்கு இடையே கையெழுத்திட்டது.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய மெத்திவ் மற்றும் மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கே.கே.சி.கே. பெரேரா ஆகியோருக்கிடையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்வானது நேற்று திங்கட்கிழமை மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க