உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

15 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் விளக்கமறியலில்

திருகோணமலை – கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை சட்டத்திற்கு முரணான ரீதியில் திருமணம் முடித்த நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க மூதூர் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தங்க நகர், கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பதினைந்து வயதுடைய சிறுமியை மூன்று வருட காலமாக காதலித்து திருமணம் முடித்துள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பில் அப்பகுதி கிராம அதிகாரி மற்றும் பொது மக்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதினைந்து வயதுடைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க