உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அடுத்த வாரம் முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்பு – பௌசி

அடுத்த வாரம் முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்கலாம் என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருமான ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்பந்தப்படவில்லை என்பதால், அவர்கள் அமைச்சர்களாக பதவியேற்பதில் சிக்கல்கள் இல்லை.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பது என தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு அமைய மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்தோம்.

மிக விரைவில் நாங்கள் அமைச்சர்களாக பதவியேற்போம் என பௌசி குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க