உள்நாட்டு செய்திகள்புதியவை

‘உயர்தரப் பரீட்சைகள் ஒகஸ்ட் 5 இல் ஆரம்பிக்கிறது’

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் நாளை தபாலில் சேர்க்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சை அடுத்த மாதம் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை பழைய மற்றும் புதிய சிபார்சுகளின் அடிப்படையில் பரீட்சை இடம்பெற உள்ளது. இதில் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 704 பேர் தோற்றவுள்ளனர்.

நாடு முழுவதிலும் 2675 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறுவதுடன் 315 இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க