வடக்கு செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி: கடற்தொழிலாளர்கள் பாதிப்பு

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சிறு கடற்தொழில்களை மேற்கொண்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடற்தொழில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கண்டாவளை பிரதேசத்தின் ஆனையிறவு தட்டுவன்கொட்டி புளியம்பொக்கணை போன்ற சிறுகடற்பகுதிகள் வற்றியுள்ளதால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் மற்றும்  தற்போது நிலவி வரும் வறட்சி என்பவற்றால் தமது தொழில்கள் முழுயைமாகவே பாதிப்படடைந்துள்ளதாக பிரதேச சிறுகடற்தொழிலாளர்கள் மேலும் கவலை தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க