உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இன்டர்போல் சிவப்பு அறிவித்தலுக்குள் 13 இலங்கையர்.எனினும் மகேந்திரன் இல்லை.

சர்வதேச ரீதியாக குற்றங்களுக்காக தேடப்படும் 7030 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போல் தெரிவித்துள்ளது.

இதில் இலங்கையை சேர்ந்த 13பேரும் அடங்குகின்றனர்.

இவர்கள் இலங்கை. இந்தியா, ரொமேனியா, கனடா ஆகிய இடங்களில் குற்றங்களை புரிந்தவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு தேடப்படும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனின் பெயர் அதில் அடங்கியிருக்கவில்லை என்று சிங்கள நாளிதழ் ஒன்று கூறுகிறது

கருத்து தெரிவிக்க