உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

யாழ்ப்பாண புதிய சிங்கள குடியேற்றத்தில் பௌத்த விகாரை

யாழ்ப்பாணம் நாவற்குழியில் மேற்கொள்ளப்பட்ட புதிய சிங்கள குடியேற்றத்தில் மிகப் பெரியளவில் அமைக்கப்பட்ட சம்புத்தி சுமன விகாரை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்த பின்னர் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றப் பிரதேசத்தில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கடுமையான எதிர்ப்புக்கள் இருந்த நிலையிலும் அந்த விகாரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந் நிலையில் சம்புத்தி சுமன எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரையின் புண்ணிய திருவிழாவாக இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த விகாரைக்கான புனித தாது குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தது.

இதற்கமைய நவாற்குழிச் சந்தியிலிருந்து குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு பவனியாக புனித தாது கொண்டு செல்லப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஐர் nஐனவர் தர்சன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், உட்பட பெருமளவிலான இராணுவத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.

அதே போன்று பெருமளவிலான சிங்கள மக்களும் பல இடங்களிலில் இருந்தும் வந்திருந்தனர். இதற்கும் மேலாக அதிகளவிலான பௌத்த பிக்குகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க