உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வலிகாமம் வடக்கில் 27.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கபட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ஒத்துழைப்போடு விடுவிக்கப்படும் குறித்த காணிகள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதுடன் ஆளுநர் அதனை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு முரளிதரனிடம் கையளித்துள்ளார்.

2015 ஆண்டு முதல் இன்றுவரை யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2963 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் இதன் போது தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க