வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவினுள் நுழைய முயன்ற 220 அகதிகள் கைது !

மெக்சிகோ வழியாக அமெரிக்காவினுள் யாரும் நுழைந்து குடியேறி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இந்நிலையில்  கவுதமாலா, ஹாண்டுராஸ், எல்சல்வடார் போன்ற நாடுகளைச் சேர்ந்த 220 அகதிகள், குளிர்பானங்கள் ஏற்றி வந்த லொறி ஒன்றினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் சட்ட விரோத முறையில் அகதிகள் உள் நுழைவதை தடை செய்வதற்கு அமெரிக்காவும் மெக்சிகோவும் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்போது 220 அகதிகள் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க