உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பாரிய விபத்தை தவிர்த்த தொடரூந்து யாழ்ப்பாண பயணத்தை தொடர்ந்தது.

வவுனியாவில் இன்று மாலை 5மணியளவில் பாரிய விபத்தை தவிர்த்த தொடரூந்து சில மணிநேரத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தை நோக்கி சென்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தொடரூந்து தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவமுகாமிற்கு முன்பாகவுள்ள கடவையில் மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகள் மீது மோதியுள்ளது.

இதன்போது பல மாடுகள் கொல்லப்பட்டன. அதில் ஒரு மாடு தொடரூந்தின் இயந்திரத்துக்குள் சிக்குண்டது.
இதன் காரணமாக இயந்திரம் இயங்காமல் போயுள்ளது.

இதன்போது சாரதியின் சாதுரியத்தினால் தொடரூந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பயணிகளுக்கான சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

எனினும் இயந்திரத்துக்குள் சிக்குண்ட மாட்டை வெளியில் எடுக்க சில மணிநேரம் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க