உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வார இதழ் விநியோகத்தர் ஒருவர் படையினரால் கைது

வார இதழ் விநியோகத்தர் ஒருவரை படையினர் இன்று கைதுசெய்துள்ளார்கள்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து நெடுங்கேணி நோக்கி பயணிக்கும் வீதியில் யாழில் இருந்து வெளிவரும்வார இதழினை விநியோகத்திற்காக கொண்டு சென்றவேளை படையினர் அவரை கைதுசெய்துள்ளார்கள்

குறித்த வார இதழ் இம்முறை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரனின் அட்டைப்படத்தை கொண்டிருந்தமையே இதற்காக காரணமாகும்

கைதுசெய்யப்பட்ட பத்திரிகை வினியோகத்தரை படையினர் ஒட்டுசுட்டான் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்கள்

விசாரணைகளின் போது கைதுசெய்வதற்கான எந்த சான்றும் இல்லாதநிலையில் காவல்துறையினர் அவரை விடுவித்துள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க