உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பாதசாரி கடவை  ஒன்றை அமைத்து தருமாறு மாணவர்கள் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மல்லாவி மயில்வாகனம் தமிழ் வித்தியாலயத்தின் முன்பாக பாதசாரி கடவை ஒன்றை அமைத்து தருமாறு பெற்றோர்  மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புகள் இடம்பெறுவதோடு இங்கு சுமார் 200 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்

குறித்த மாணவர்கள் பாடசாலை வருகின்றபோதும் பாடசாலை விட்டுச் செல்கின்ற போதும் பாதையைக் கடப்பதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறித்த பகுதியில் விபத்துக்கள் ஏற்பட கூடிய வாய்ப்புகள் இருப்பதால்  ஏற்கனவே ஒரு பாதசாரி கடவை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த இடத்தில் ஒரு பாதசாரி கடவை அமைத்து மாணவர்கள் பாதுகாப்பாக பாடசாலை வந்து செல்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு பாடசாலை சமூகம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கருத்து தெரிவிக்க