சினிமாபுதியவை

நடிகர் சங்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் மறுப்பு

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியை மறுத்து சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை கடந்த ஜூன் 23- ஆம் திகதி நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட கூடாது என உத்தரவிட்டது.

அதன்படி தேர்தல் முடிவடைந்து வாக்குபெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் விஷால் சார்பாக சென்னை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை இப்பொழுது எண்ண முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், விசாரணை நிலுவையில் உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

கருத்து தெரிவிக்க