உள்நாட்டு செய்திகள்புதியவை

‘நாட்டின் ஐக்கியத்துக் கு மொழி பயிற்சி அவசியம்’

நாட்டின் அபிவிருத்தியானது பொதுமக்களின் தேவைக்கமைவாகவே இடம்பெற வேண்டும். அரசியல்வாதிகளின் தேவைக்காக  இடம்பெறக்கூடாது என மின்சக்தித்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மொழிப் பயிற்சியை முன்னெடுப்பதன் மூலமே நாட்டு மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். இனவாதத்தை தோற்கடித்து, இலங்கையின் இறைமையை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நிலையை ஏற்படுத்த ஐக்கிய தேசிய கட்சியினாலேயே முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க