உள்நாட்டு செய்திகள்

மொனராகலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலை

மொனராகலை மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

36 மில்லியன் ரூபா செலவில் வெள்ளவாய தள வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த  சிகிச்சை பிரிவு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்களையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

மேலும் சிறுநீரக நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று நோயாளர்கைள பதிவு செய்யும் நிகழ்வும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.

சிறுநீரக நோயாளர்களின் குடும்பங்களுக்காக உதவிகளை வழங்கும் செயற்திட்டமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன்  மொனராகலை பொது வைத்தியசாலைக்கு 100 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க