உள்நாட்டு செய்திகள்புதியவை

‘சட்டத்தை கையில் எடுத்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும்’

தற்போதைய அரசாங்கத்தை எதிர்வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என நாடா ளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் குற்ற புலனாய்வு பிரிவை தமது ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தது.

அத்துடன் அப்பிரிவின் உயரதிகாரியான சம்மி கருணாதாஸ கைது செய்யப்பட்டார்.

இது போன்ற செயற்பாடுகளால் நாட்டை அழிவுக்குள்ளாக்கினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் குற்ற புலனாய்வு பிரிவின் தேவையை அறிந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க