பொன்மொழிகள்

எல்லாத் துன்பங்களுக்கும் புலன்களே காரணம்!-கௌதம புத்தர்-

  • எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.
  • உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.
  • எல்லாத் துன்பங்களுக்கும் புலன்களே காரணம். நீங்கள் சுயத்தின் மகிழ்ச்சிக்காக வாழவிரும்புகிற போதுதான் துன்பம் உங்களைத் தொடுகிறது, தொடர்கிறது.
  • தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிகத் துன்பத்தைத் தருகிறது.

கருத்து தெரிவிக்க