உள்நாட்டு செய்திகள்

அரசியல் கட்சிகள் கொழும்பில் முகாமிட்டு பேச்சு!

பிரதான அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாளையும், நாளை மறுதினமும் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை அலரிமாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுஎதிரணியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாளை  மறுதினம் காலை கூடவுள்ளது. அன்று மாலை பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடனும் மஹிந்த ராஜபக்ச பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், ஶ்ரீலங்கா  சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி., தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (09) நடைபெறவுள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க