உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துவாழும் முஸ்லிம் மக்கள் சிலராலேயே இவ்வாறு முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.

” இலங்கையில்வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக குறித்த தேரர் வன்முறைகளை தூண்டிவருகிறார். அவருக்கு எதிராக சட்டம் செயற்படுவதாக தெரியவில்லை.

எனவே, முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசுக்கு, மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டும்.” எனவும் மேற்படி முறைப்பாடுகள் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க