பொன்மொழிகள்

மனதை இறைவனிடம் வை!-இராமகிருஷ்ணர்.

  • ஆணவம் இருந்தால் இறையனுபூதி ஏற்படாது. ஆணவம் எத்தகையது தெரியுமா? அது குன்றின் உச்சி போன்றது, அங்கே மழைநீர் தங்குவதில்லை, கீழே ஓடி விடுகிறது. அதுபோல் ஆணவம் என்ற குன்றின் உச்சியில் இறையருள் என்ற மழைநீர் தங்காது.
  • ஆமை தண்ணீரில் இங்குமங்கும் திரிகிறது. ஆனால் அதன் மனமெல்லாம் எங்கிருக்கும் தெரியுமா? தான் தரையில் இட்ட முட்டைகளின் மீது. அதுபோல் இல்லறத்தில் உனக்குரிய எல்லா கடமைகளையும் செய், ஆனால் மனத்தை இறைவனிடம் வை!

கருத்து தெரிவிக்க