இலங்கையில் படைத்தளம் எதனையும் அமைக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதுவர் எலைய்னா பி டெப்ளிட்ஸ் இதனை தெரிவித்துள்ளார். உள்ளூர் செய்தித்தாள் ஒன்று SOFA உடன்படிக்கை மூலமாக இலங்கையை அமெரிக்கா குடியிருப்பாக மாற்ற முனைவதாக குற்றம் சுமத்தியிருந்தது. இந்தநிலையில் எந்த ஒரு உடன்படிக்கையும் இலங்கையின் இறைமையை பாதிக்காது என்றும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க