வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 3 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜோய் கூப்பர் (வயது 28) விடுமுறையை கழிப்பதற்காக தனது நண்பர்களுடன் அலாஸ்கா மாகாணத்தின் கெனாய் தீபகற்பத்தில் உள்ள மூஸ்பாஸ் நகரத்திற்கு சென்றார். அங்கிருந்து சிறிய விமானம் ஒன்றில் ஜோய் கூப்பரும் அவரது நண்பர்கள் மூவரும் ஊரைச் சுற்றி பார்க்க சென்றனர். விமானம் மலைப் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது , விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்ததோடு ஜோய் கூப்பர் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் ஜோய் கூப்பரை வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்து தெரிவிக்க