உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப போராடும் ஜேவிபி

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களையும் சட்டவாக்க நடவடிக்கைகளையும் ஜேவிபி ஜூலை மாதத்தில் தீவிரப்படுத்துகிறது.

இதன்படி அரசாங்கத்துக்கு எதிரான ஜேவிபியின் நம்பிக்கையில்லா பிரேரணை ஜூலை 10, 11ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதத்துக்கு வருகிறது.

அதேநேரம் “அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்” என்ற மக்கள் பேரணி ஜூலை 7, 8ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த பேரணி, 7ஆம் திகதி களுத்துறையில் ஆரம்பித்து மொரட்டுவையில் முடிவடைகிறது.

பின்னர் 8ஆம் திகதி மொரட்டுவையில் ஆரம்பித்து நுகெகொடையை வந்தடையவுள்ளது. அங்கு பொதுக்கூட்;டம் இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க