உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

வாகன விபத்தில் மனிதனும் மாடும் சம்பவ இடத்திலேயே மரணம்

மாத்தறை ஊறுபொக்க கொட்டப்பொல பிரதான வீதியின் கிரிலிபான விகாரைக்கு அருகில் மாடு ஒன்றை வழிநடத்தி சென்ற நபர் பாதையை கடக்க முற்பட்ட போது வேகமாக ஊறுபொக்க பிரதேசத்தில் இருந்து வந்த கெப் வண்டி ஒன்று மாட்டின் மீதும் அதனை கொண்டு சென்றவர் மீதும் மோதியுள்ளது.

இதன் போது சம்பவ இடத்திலேயே மாடு பலியானது.அதனை வழிநடத்திச்சென்றவரும் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மொறகல கிரிலிபான பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவராவார்.

இவரின் சடலம் ஊறுபொக்க ஈகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தெனியாய கொலவெனிகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய கெப் வண்டியின் சாரதியை ஊறுபொக்க பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாரதி சம்பவத்தின் போது மது அருந்தியுள்ளதாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க