உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கடந்த சில நாட்களுக்குள் மன்னாரில் 3,500 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு

மன்னார் ஒலுத்துடுவை பகுதியில் 126.5 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படை வீரர்கள் இன்று காலை மேற்கொண்ட தடுத்தல் நடவடிக்கையின் 4 பீடி சுற்றும் இலை பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பீடி சுற்றும் இலைகள் யாழ்ப்பாண சுங்க பிரிவிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மன்னார் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் தேடல்களின் போது 3,500 கிலோ பீடி இலைகளை கடற்படை கைப்பற்றியுள்ளதுடன், இந்த வகையான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க