உள்நாட்டு செய்திகள்புதியவை

ரயில்வே ஊழியர்கள் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்படும்: ரயில்வே திணைக்களம்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவையாக ரயில் சே​வை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில்வே திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்கள் தொடர்பில் இன்று முதல் அதிகக் கவனம் செலுத்தப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, உரிய நேரத்தில் வேலைக்கு சமூகமளிக்காமை மற்றும் தாமதமாக பயணிக்கும் ரயில்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க