உள்நாட்டு செய்திகள்புதியவை

சாஃபி சஹாப்தீன் குறித்த ரத்ன தேரரின் முறைப்பாட்டை அடுத்து தீவிரம்!

வைத்தியர் மொஹமட் சாஃபி சஹாப்தீன் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என அத்துரலிய ரத்ன தேரர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரிடம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் எழுத்து மூலம் முறைப்பாடை கையளித்துள்ளார்.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அறிக்கையிலுள்ள விடயங்களுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க