உள்நாட்டு செய்திகள்புதியவை

அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் கண்டுபிடிப்பு!

கற்பிட்டி மற்றும் ஆராச்சிகட்டு ஆகிய கடற்பகுதிகளில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

கற்பிட்டி – நுரைச்சோலை தலுவ பகுதியில் இன்று சனிக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

சடலம் அடையாளங்காண முடியாத அளவுக்கு சிதைவடைந்து காணப்படுவதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஆராச்சிகட்டு, முத்துபந்திய கடற்கரையிலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் வெளிநாட்டவர் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு சடலங்கள் மீதான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க