உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கிளிநொச்சியில் நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட சர்வ மத குழுவினரின் ஏற்பாட்டில் சமய நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு நாச்சிக்குடா சென் ஜேன்ஸ் பொது நோக்கு மண்டப வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது.

பொசன் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் சமய தலைவர்கள், பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வு சார்ந்த தெரு நாடகம் ஒன்றும் இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க