வெளிநாட்டு செய்திகள்

‘மிஸ் அவுஸ்திரேலியா’ பட்டத்தை வென்ற இந்தியப் பெண்

அவுஸ்திரேலிய அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா ‘மிஸ் அவுஸ்திரேலியா 2019’ மகுடத்தை வென்றுள்ளார்.

நேற்றிரவு மெல்போர்னில் இடம்பெற்ற இந்த போட்டியில் வென்றதன் மூலம் அழகி பிரியா விரைவில் நடைபெற உள்ள மிஸ்யுனிவர்ஸ் அழகி போட்டிக்கு அவுஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

போட்டியில் வென்றது தொடர்பாக பேசிய பிரியா, எனக்கு இது முதல் அழகிப் போட்டியாகும்.

இதற்கு முன்னதாக எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்றதில்லை. மொடலிங் செய்தது இல்லை. நான் அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன்.

போட்டியில் வென்று மிஸ் அவுஸ்திரேலியா பட்டம் வென்றது பெரிய ஆச்சரியம் அளிக்கிறது,” எனக் கூறியுள்ளார்.

சட்டம் படித்துள்ள பிரியா மெல்போர்னில் மாநில அரசு ஒன்றில் தொழில் வழங்கும் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கருத்து தெரிவிக்க