அரச திணைக்களங்களில் பணியாற்றும் பெண்கள் முகத்தை மூடாத வகையில் நேர்த்தியான ஆடைகளை அணிவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் நேற்று இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி ஏற்கனவே பெண்கள் சேலை அல்லது ஒசாரி மாத்திரமே அணியவேண்டும் என்ற சுற்றுநிருபம் ரத்தாகிறது.
இந்த சுற்றுநிருபம் காரணமாக முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்தே அமைச்சரவை மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
கருத்து தெரிவிக்க