உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

அமரிக்க உடன்படிக்கைக்கு ஜனாதிபதி சிறிசேன உடன்பாடில்லை.

சுமார் 480 மில்லியன் டொலர்களை கொண்ட, அமரிக்காவின் “மிலேனியம் செலேஞ் கோப்பரேசன்” உதவி திட்ட உடன்படிக்கையின் முன்னர் ஒவ்வொரு விடயமும் கூர்ந்து அவதானிக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த உதவிதிட்டம் ஐந்து வருட அடிப்படையில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இதன்மூலம் வாகன நெருக்கடியை குறைத்தல், பொதுப்போக்குவரத்தை சீர்படுத்தல் உட்பட்ட விடயங்களுக்கு தீர்வுக்காணப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த உடன்படிக்கை தொடர்பில் உடன்படிக்கையை கொள்வதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் அவசியம்.

எனினும் அதற்கு முன்னதாக அந்த உடன்படிக்கை தொடர்பில் ஒவ்வொரு பந்தியும் அவதானிமாக வாசித்தறியப்படவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதன்போது கருத்துரைத்த அமைச்சர் மங்கள சமரவீர கடந்த அரசாங்கத்துக்கு இந்த உதவிதிட்டத்தை பெற்றுக்கொள்ளமுடியவில்லை.

எனினும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு அதனை பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி உடன்படிக்கையின் சில இடங்களில் காணி தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க